1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijayakanth statement about nellai school accident

நெல்லை பள்ளி விபத்து: விஜயகாந்த் அறிக்கை!

விஜயகாந்த்
நெல்லையில் உள்ள பள்ளி கழிவறையின் சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
நெல்லை தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
 
பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் எந்த தவறும் செய்யாத பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் தற்போது போயுள்ளதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
 
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் 101 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு