1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vck president thirumavalavan says about alcohol

மதுக்கடைகளை மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் கவலையில்லை: திருமாவளவன்

மதுக்கடைகள்
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அனைத்து மது கடைகளை மூடிவிட்டால் எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் மீண்டும் வெற்றி பெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தயிருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக அதிமுக ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். 
 
இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் திமுக அரசு முடிவிட்டால் அதன் பிறகு எத்தனை விஜய் வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார் 
 
மதுவுக்கு எதிரான போராட்டத்தின் மூலம் என்ன விளைவுகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
TNPSC குரூப்-2 தேர்வு எதிரொலி.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!