1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. VCK member attacked women in problem at illegal relationship

கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கத்தியால் வெட்டிய விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்

கள்ளக்காதல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் கள்ளக் காதல் விவகாரத்தில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர செயலாளராக இருப்பவர் தேஸ்கோ என்ற தெய்வசிகாமணி. இவர் இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். இவருக்கு பெண் ஒருவருடன் கள்ளக்காதல் தொடர்பு இருந்துள்ளது.
 
சமீபத்தில் அந்த பெண் தேஸ்கோவை விட்டு வேறொருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனை தெரிந்துக்கொண்ட தேஸ்கோ அந்த பெண்ணை எச்சரித்துள்ளார். ஆனால் அந்த பெண் கண்டுக்கொள்ளவில்லை. 
 
இதனால் ஆத்திரமடைந்த தேஸ்கோ இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பெண்ணை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இதையடுத்து தேஸ்கோ மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார். ஆனால் கொலை முயற்சிக்கு பதில் வழிபறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.