தொடர்புடைய செய்திகள்
- ஜூலை 19ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!
- 16 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்தமா? இன்று 5 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!
- இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும்: சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!
- கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. 9 பேர் பலி.. 35 வீடுகள் சேதம்.. மீட்பு பணிகள் தீவிரம்..!
தொடர் கனமழை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் தொடர் கன மழை காரணமாக நாளை வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
மேலும் கோவை மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை அதாவது ஜூலை 18ஆம் தேதி விடுமுறை என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்
பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
