தொடர்புடைய செய்திகள்
- வைகாசி பௌர்ணமி: கிரிவலம் செல்வதால் கிடைக்கும் கோடி புண்ணியம்!
- வைகாசி விசாகம்: குறைகளை நீக்கி அருள் தரும் முருக வழிபாடு!
- மேகதாது அணை விவகாரம்: டிகே சிவகுமாருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்..!
- திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா: தேதி அறிவிப்பு..!
- ஜப்பான் ரிலீஸ் தேதி மாற்றத்துக்குக் காரணம் நெட்பிளிக்ஸா?
இன்று வைகாசி விசாகம்.. முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்..!
இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
உலகம் முழுவதும் முருக பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று வைகாசி விசாகம். இந்த நாளில் பால்குடம் பால்காவடி ஏந்தி பக்தர்கள் செல்வார்கள் என்பதும் பல பக்தர்கள் பாதயாத்திரை சென்று தங்களது நேர்த்டி கடனை நிவர்த்தி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திர தினத்தன்று மயில் மீது ஏறி முருகன் வருவார் என்று பொருள் என்பதால் இந்த தினத்தை முருக பக்தர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில் இன்று வைகாசி விசாகம் கொண்டாடப்படுவதை அடுத்து தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக சென்னை வடபழனி, மதுரை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
