1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vaccine camp in tamil nadu started

25 லட்சம் டார்கெட்: 4வது வார மெகா தடுப்பூசி முகாம்!

கொரோனா
இன்று நடைபெறும் மெகா முகாம்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்றும் மெகா தடுப்பூசி முகாம் துவங்கி  நடைபெற்று வருகிறது. 
 
4 வது முகாமான இன்று 20,000 இடங்களில் நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 1,600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் மெகா முகாம்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஆட்கொல்லி புலிக்கு பாசம் காட்டும் கமல்: நெட்டிசன்கள் கலாய்!