தொடர்புடைய செய்திகள்
- தேர்தலில் அதிமுக படுதோல்வி: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை
- அவர் பாஜக வேட்பாளரே இல்ல.. சுயேட்சையா நின்னவர்! – பாஜக தரப்பு விளக்கம்!
- 77 இல்ல 110 பேர் வெற்றி... கலக்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்
- கிட்டத்தட்ட முடிந்தது வாக்கு எண்ணும் பணி; 2 மணிக்கு முழு ரிசல்ட்!
- குடியிரிமை சட்டத்தை ரத்து செய்ய.. கூனாம்பட்டி மக்களே சிந்திப்பீர்! – சுயேட்சை வேட்பாளரின் சேட்டை போஸ்டர்!
மக்கள் தந்த மகத்தான பரிசு: உதயநிதி ஸ்டாலின் டுவிட்!
தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் தமிழக வரலாற்றில் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு அரசியல் கட்சி இவ்வளவு பெரிய வெற்றியை இதுவரை சந்தித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
அதேபோல் பெரும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய அதிமுக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவுக்கு மக்கள் அளித்த வெற்றி குறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
கழக அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகளுக்கு மக்கள் தந்த மகத்தான பரிசு உள்ளாட்சி தேர்தல் வெற்றி. மீதமிருக்கும் வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. வெற்றிபெற்ற இளைஞரணியினர்- கழகத்தினர், கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்து. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.
அடுத்த கட்டுரையில்
