தொடர்புடைய செய்திகள்
- கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!
- முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!
- திடீரென மொட்டையடித்த ‘காதல்’ பட நடிகை.. சாமியாராக போகிறாரா?
- விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன்… KPY பாலா பதில்!
- நக்சலைட்டுகள் 8-பேர் சுட்டுக் கொலை.! பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மரணம்..!
19 வயது பெண்ணை காதலித்த இரு இளைஞர்கள்.. கொலையில் முடிந்த முக்கோண காதல்..!
19 வயது பெண்ணை இரு இளைஞர்கள் ஒரே நேரத்தில் காதலித்த நிலையில் இந்த முக்கோண காதல் கொலையில் முடிந்த சம்பவம் ஈரோடு அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளூர் நகர் பகுதியில் சேர்ந்த சேது மணிகண்டன் மற்றும் குகநாதன் ஆகிய இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை காதலித்ததாக தெரிகிறது
முதலில் சேது மணிகண்டன் அந்த பெண்ணை காதலித்ததாகவும் அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து குகநாதன் அதே பெண்ணை காதலித்து வந்த நிலையில், தான் காதலித்த பெண்ணை நீ காதலிக்க கூடாது என்று சேது மணிகண்டன் குகநாதனை மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து இருவருக்கும் மேற்பட்ட தகராறொ; திடீரென குகநாதன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சேது மணிகண்டனை சரமாரியாக குத்திய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து லிகநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பெண்ணை இரண்டு இளைஞர்கள் காதலித்த நிலையில் இந்த முக்கோண காதல் கொலையில் முடிந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
