1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:14 IST)

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வு பகுதி! கொட்டப்போகுது கனமழை!

தமிழகத்தை மையமாகக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி கல்தோன்றி உள்ளதால் கன மழை கொட்ட போகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தம் காரணமாக சென்னை முதல் நெல்லூர் வரையிலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அரபி கடலில் தோன்றி உள்ள மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மைசூர் முதல் ராமநாதபுரம் வரை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது