ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (12:30 IST)

வேளாண் மண்டலம் ஒரு ஏமாற்று வேலை.. தினகரன் குற்றச்சாட்டு

தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு ஒரு ஏமாற்று வேலை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து சட்டமும் இயற்றப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகளின் ஆதரவும் ஓரளவு இருந்தது. மேலும் விவசாயிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ”மத்திய அரசின் ஆதரவுடன், தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. வேளாண் மண்டல அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை” என குற்றம் சாட்டியுள்ளார்.