வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (12:29 IST)

திருச்சி கூட்டுறவு வங்கியில் கொள்ளை..

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ரூ.1.50 கோடி கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவெறும்பூரில் அமைந்துள்ள பெல் நிறுவன தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி கொள்ளை போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இது குறித்து காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளை அரங்கேறியதை தொடர்ந்து தற்போது, பெல் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கியில் கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.