தொடர்புடைய செய்திகள்
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையத்தை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்....
- புதிய தாழ்தள பேரூந்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்....
- கிளாம்பாக்கம் ரயில் நிலையம் கட்டுமான பணிகள் தொடக்கம்.. செயல்படுவது எப்போது?
- கிளாம்பாக்கத்தில் போதை பொருள் கடத்தல்: திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
- சென்னையில் சிக்கிய ரூ.70 கோடி மதிப்பு போதைப்பொருள்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி..!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத பேருந்துகள்.. போக்குவரத்து நெருக்கடி..
கடுமையான போக்குவரத்து நெருக்கடி காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், இதனால் கிளாம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வரை வரிசையாக பேருந்துகள் நின்று கொண்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பொது மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்திற்குள் செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கும் நிலையில், அந்த ஒரு வழியாக செல்வதில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் வண்டலூர் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பேருந்துகள் வரிசையாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி இருப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் ஏற்பட்ட இந்த போக்குவரத்து பாதிப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Edited by Siva
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் பொது மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்திற்குள் செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கும் நிலையில், அந்த ஒரு வழியாக செல்வதில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் வண்டலூர் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு பேருந்துகள் வரிசையாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி இருப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் ஏற்பட்ட இந்த போக்குவரத்து பாதிப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Edited by Siva
