1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 20 ஜூலை 2021 (11:01 IST)

துவங்கிய சீசன்... மீண்டும் கலைக்கட்டும் சுற்றுலாத் தளங்கள் !

துவங்கிய சீசன்... மீண்டும் கலைக்கட்டும் சுற்றுலாத் தளங்கள் !
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு இருந்த நிலையில்  ஊரடங்கு தளர்வுகளால் மீண்டும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டது. 

 
தற்போது மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் தளர்வுகள் உள்ள நிலையில், நிலகிரியில் இதமான சூழ்நிலை உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதனால் சுற்றுலாத் தளங்கள் மீண்டும் கலைக்கட்ட துவங்கியுள்ளது. 

இதனிடையே, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் இ-பதிவு, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.