1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tomorrow kanum pongal security at chennai

நாளை காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

marina
நாளை காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்வருமாறு;
 
* 15,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
* மெரினா, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரைகளில் பலத்த பாதுகாப்பு.
* கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
* ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு.
* மாறுவேடத்தில் காவலர்கள் ரோந்து.
* கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க நடவடிக்கை.
* காணாமல் போகும் நபர்களை கண்டுபிடிக்க தற்காலிக காவல் நிலையங்கள்.
 
மேலும் பாதுகாப்பில் உள்ள காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும் என்றும்,  தவறான செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும் என்றும்,  பொது இடங்களில் பொருட்களை தொலைக்காமல் கவனமாக இருக்கவும் என்றும்,  அவசரகாலங்களில் 100 என்ற எண்ணை அழைக்கவும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கேலோ இந்தியா நிகழ்ச்சிக்கு மோடியை அழைக்காமல் இருந்திருக்கலாம்: வேல்முருகன்