1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TNPSC explain about increasing vacant places

குரூப் -4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பா? TNPSC விளக்கம்

tnpsc
குரூப் -4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகளுக்கு TNPSC விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
2022 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
 
2024 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. 
 
எனவே 2024 ம் ஆண்டு தொகுதி IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன.
 
எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக
பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்  என TNPSC  விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அதிபர் ஆவதற்கான மனநிலை, உடல்நிலை தகுதி.. கமலா ஹாரிஸ்-க்கு மெடிக்கல் சர்டிபிகேட்..!