தொடர்புடைய செய்திகள்
- விஜய் படம் பத்தி எனக்கு எதுவும் தெரியாது… ஷோபா சந்திரசேகர் பதில்!
- வேகமாக பரவும் கொரோனா; அரசு மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவு!
- எத்தனை பெட், ஆக்ஸிஜன் ஸ்டாக் இருக்கு? உடனே ரிப்போர்ட் பண்ணுங்க! – அமைச்சர் அதிரடி உத்தரவு!
- சென்னை கிங்ஸ்-ல் ஒரு தமிழ் வீரரும் இல்லையா? ரசிகர்கள் ஏமாற்றம்
- அவதார்-2 ரிலீஸின்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்த என்ன காரணம்?
பொங்கல் தொகுப்புக்கு இன்று முதல் டோக்கன்! – பொருட்கள், பணம் எப்போது?
ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு பொருட்களுக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மக்களுக்கு அரசு சார்பில் ரேசன் கடைகள் வாயிலாக இலவச பொருட்கள் மற்றும் பணம் வழங்குவது நடந்து வருகிறது. கடந்த ஆண்டு திமுக பொறுப்பேற்ற நிலையில் பரிசு பணத்திற்கு பதிலாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆனால் அது விமர்சனத்திற்கு உள்ளானதால் இந்த ஆண்டு இலவச அரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 பணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
ரேசன் அட்டைதாரர்களுக்கு இன்றும், நாளையும் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்திற்கு சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 2ம் தேதி பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர் தினம்தோறும் டோக்கன் வாரியாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
Edit by Prasanth.K
