1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TN Govt says rs.10 for empty bottle

காலி மதுபாட்டிலை கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு!

bottles
காலி மதுபாட்டிலை கொடுத்தால் ரூ.10 வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு!
காலி மதுபாட்டில்கள் கொடுத்தால் ரூபாய் பார்த்து வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபாட்டில்களுக்கும் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று கூறியுள்ள தமிழக அரசு, மதுவை அருந்தியவுடன் அந்த காலி பாட்டிலை திரும்ப கொடுத்துவிட்டு கூடுதலாக கொடுத்த 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் காலி பாட்டில்களை ஆங்காங்கே வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் கூறிய நிலையில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மது வாங்கியவர்கள் மட்டுமின்றி யாராக இருந்தாலும் காலி பாட்டிலை எடுத்துக்கொண்டு போய் மதுக்கடையில்  கொடுத்தால் ரூபாய் 10 திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
அடுத்த கட்டுரையில்
சர்க்கரை, அப்பளம், சாக்லேட் பொருட்களின் ஜி.எஸ்.டி வரி உயருகிறதா?