1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 ஜூன் 2020 (14:57 IST)

தமிழகத்தில் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? – திங்கட்கிழமை கூட்டத்தில் முடிவு!

தமிழகத்தில் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? – திங்கட்கிழமை கூட்டத்தில் முடிவு!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து திங்கட்கிழமை அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பல கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கின் ஐந்தாம் கட்டம் ஜூன் 30 வரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள முதல் திங்கட்கிழமை அன்று மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அவர்களுடனான ஆலோசனைக்கு பிறகே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.