1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (11:01 IST)

அரியலூர் மற்றும் நாமக்கல்லில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சில பகுதிகளில் மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அரியலூர் இருவேறு பள்ளிகளில் தலா ஒரு மாணவிக்கும், நாமக்கல்லில் ஒரு மாணவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல கடலூர் மாவட்டத்தில், மூன்று ஆசிரியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.