ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (21:40 IST)

தமிழ்நாட்டை ஆளுனர் கட்டுப்படுத்துவதை ஏற்கமுடியாது: திருமுருகன் காந்தி

தமிழ்நாட்டை ஆளுநர் கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என திருமுருகன் காந்தி தனது டுவிட்டரில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: 
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் 'ஆளுனர்' எனும் போர்வையில் 'பாஜக' மூக்கை நுழைப்பதை அனுமதிக்க இயலாது. தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழக மக்களே நிர்ணயிப்பார்கள். யாராலோ நியமணம் செய்யப்பட்டவர் தமிழ்நாட்டை கட்டுப்படுத்துவதை ஏற்கமுடியாது. கட்சி எல்லை கடந்து ஆளுநரை கண்டிப்போம் என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட அலுவல் ரீதியான கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறி இருக்கிறது என்றும் வழக்கமான நிகழ்வுகளை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானது அல்ல என்றும் அரசு திட்டங்கள் பற்றிய ஆளுநருக்கு விளக்கம் அளிக்க தயாராகும்படி அனுப்பிய கடிதம் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.