1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 29 அக்டோபர் 2022 (20:38 IST)

''ஓ சொல்றியா மாமா'' பாடலுக்கு ரோட்டில் நடனம் ஆடிய ஆசிரியர் !

DANCE
நாகர்கோவில் மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் ஓ சொல்ரியா என்ற பாடலுக்கு நடனம் வீடியோ வைரலாகி வருகிறது.

நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மதுரையில் நடைபெற்ற ஒரு போட்டியில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தனர்.

அப்போது, அவர்கள் சென்ற வாகனம்  உணவு சாப்பிடுவதற்காக ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது.

மாணவர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் புஸ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடினர். அவர்களுடன் சேர்ந்து, ஆசிரியரும் நடனம்  ஆடினர்.

மாணவ, மாணவியருடன் சேர்ந்து ஆசிரியரும்  நடு ரோட்டில் நடனம் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதுகுறித்து, கல்வி  ஆதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Sinoj