1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Agnipath Project...first phase in Tamil Nadu.. - Central Govt

தமிழகத்தில் அக்னி வீரர்களுக்கான தேர்வு முகாம்: தேதி அறிவிப்பு!

Agnipath
தமிழகத்தில் முதல்கட்டமாக அக்னி வீரர்களுக்கான தேர்வு முகாம் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ளது
 
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் முதல் கட்டமாக அக்னி வீரர்கள் தேர்வு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது
 
ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜூலை 30ஆம் தேதிவரை joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இலங்கையில் அலுவலக நேர ரயில்கள் மட்டுமே இயங்கும்!