தொடர்புடைய செய்திகள்
- மழை, வெள்ளத்தை பயன்படுத்தி கொள்ளை: உஷார் மக்களே
- மழை குறித்து இன்று அச்சப்பட தேவையில்லை; நார்வே வானிலை மையம் அறிவிப்பு
- வீணாக கடலில் கலந்த ஒரு டி.எம்.சி மழை நீர் - பொதுமக்கள் அதிர்ச்சி
- சென்னையில் இடியுடன் கூடிய கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
- சென்னையில் கனமழை ; புயல்,வெள்ளம் ஏற்படுமா? - பதில் சொல்கிறார் வெதர்மேன்
ரூ.5.70 கோடி பணமோசடி புகார்: பிரபல பிரியாணி கடை உரிமையாளர் கைது
சென்னையில் பல கிளைகள் கொண்ட பிரபலமான பிரியாணி கடை ஒன்றின் உரிமையாளர் ஆசிப் அகமது என்பவர் பணமோசடி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கோதண்டம் என்பவர் கொடுத்த புகாரில், 'தன்னிடம் ஆசிப் அகமது பிரியாணி கடை வைக்க ரூ.5.70 கோடி கடன் வாங்கியதாகவும், கடனுக்கு உத்தரவாதமாக அவர் கொடுத்த காசோலைகள் போதிய பணமின்றி திரும்பி விட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை நடத்தாமல் இருக்க தனக்கு ரூ.2 கோடிக்கு டிடியும், ரூ.2 கோடிக்கு செக்கும் கொடுத்ததாகவும், ஆனால் டிடி போலியானது என்றும், செக் பணமின்றி திரும்பி வந்துவிட்டதாகவும், கோதண்டம் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனுவை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆசிப் அகமதுவை கைது செய்தனர்,
அடுத்த கட்டுரையில்
