சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (23:53 IST)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகராட்சி நடைபெற உள்ள நிலையில்  இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை நிறைவடைந்துள்ளது.

பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்   எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21 நகராட்சிகள், 138 நகராட்சிகள் , 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், 2.50 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இ ந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பள்ளிகள் கல்லூரிகளுக்கு நாளை( பிப்ரவரி- 18)  மற்றும் மறுநாள்(  பிப்ரவரி-19) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.