வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:00 IST)

பின்பக்கமாக வாடிக்கையாளர்களை அனுமதித்த ஜவுளிக்கடை… அபராதம் போட்ட மாநகராட்சி!

பின்பக்கமாக வாடிக்கையாளர்களை அனுமதித்த ஜவுளிக்கடை… அபராதம் போட்ட மாநகராட்சி!
வேலூரில் பிரபல தனியார் ஜவுளிக் கடை ஒன்றில் ஊரடங்கை மீறி வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பெரிய ஜவுளிக்கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூரில் தடையை மீறி ஒரு ஜவுளிக்கடையில் பின்பக்கமாக வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று கடையை மூடி ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.