தொடர்புடைய செய்திகள்
- பாஜகவுடன் கூட்டணி.. அதிமுகவை கைப்பற்றும் திட்டமா? – ஓபிஎஸ் சீக்ரெட் ப்ளான்!
- திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் அலுவலகத்தில் திடீர் ரெய்டு..வருமான வரித்துறையினர் அதிரடி..!
- போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது.. சமூகநலக் கூடங்களில் தங்கவைப்பு!
- பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு -அமைச்சர் அன்பில் மகேஷ்
- அண்ணாமலையின் பாதயாத்திரை ஒத்திவைப்பு- பாஜக அறிவிப்பு
திமுகவை எதிர்த்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்: ஆசிரியர்கள் அறிவிப்பு..!
திமுகவை எதிர்த்து 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கையை அரசு இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை.
அதுமட்டுமின்றி உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களை கைது செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களையும் கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக நிற்கும் 40 தொகுதிகளிலும் ஆசிரியர்களை நிறுத்தப் போகிறோம் என்றும் நேரடி தேர்தல் களத்தில் சந்தித்து எங்கள் பலத்தை காட்டுவோம் என்றும் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
