தொடர்புடைய செய்திகள்
- சமாதிக்கு மட்டும் ரூ.100 கோடி இருக்கும்போது, ஆசிரியர்களுக்கு ஊதியம் தர நிதி இல்லையா! சீமான் கண்டனம்..!
- போராட்டம் நடத்தும் ஆசிரியர் சங்கம்.. பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு..!
- கழிவறை கேட்டு காத்திருக்கு போராட்டம்! – மதுரை உசிலம்பட்டியில் பரபரப்பு!
- காவிரி நதிநீர் பிரச்சினை; மதுரையில் நாம் தமிழர் கட்சி போராட்டம்!
- ஆசிரியர்கள் போராட்டம்.. பேச்சு நடத்தக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது! அன்புமணி ராமதாஸ்!
9வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்.. கண்டுகொள்ளுமா அரசு?
சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாகவும் பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் 9வது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டம் தொடர்கிறது என்று ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
Edited by Mahendran
