தொடர்புடைய செய்திகள்
- காசுக்கு கணக்கு வெச்சுருக்கியா? முட்டை வியாபாரியிடம் பணம் அபேஸ் – சென்னையில் நூதன கொள்ளை!
- கூட்டம் கூட்டிய முன்னாள் அமைச்சர் பொன்முடி; வழக்கு போட்ட போலீஸார்!
- எங்க பைக்கையா பிடிக்கிறீங்க? – காவல் நிலையத்துக்கே கரண்ட் கட் போட்ட மின்வாரியம்!
- ஃபீஸ் கட்டாத மாணவர்களுக்கும் பாஸ் போடுங்க! – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
- அடுத்த மாதம் முதல் பேருந்துகள் இயங்க வாய்ப்பு?! – இ-பாஸ் முறை ரத்தா?
மதுரையை பின்னுக்கு தள்ளிய சென்னை! – கலகலக்கும் டாஸ்மாக் வசூல்!
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்ததால் ரூ.243 கோடி வசூலாகியுள்ளது.
கடந்த இரண்டு மாத காலமாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. இதனால் மது பிரியர்கள் சனிக்கிழமையே இரண்டு நாட்களுக்குமான மதுவை வாங்குவதால் சனிக்கிழமைகளில் டாஸ்மாக் வருமானம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது விற்பனை ரூ.243 கோடியாக உள்ளது. கடந்த வாரம் வரை சென்னையில் அநேகமான டாஸ்மாக் திறக்கப்படாததால் மதுரை மண்டலம் அதிகமான மது விற்பனை வசூலை கண்டு வந்தது. இந்நிலையில் இந்த முறை சென்னை மண்டலத்தில் ரூ.52 கோடிக்கு மது விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது.
மதுரை மண்டலத்தில் ரூ.49 கோடிக்கும், திருச்சியில் ரூ.48 கோடிக்கும், சேலத்தில் ரூ.47 கோடிக்கும், கோவையில் ரூ.45 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
