தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக்கில் அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் என்ன புனித நீரா? சீமான்!
- காலி மதுப்பாட்டில்களுக்கு ரூ.10 டிஸ்கவுண்ட்! – டாஸ்மாக் எடுத்த முடிவு!
- டாஸ்மாக் கடையை இழுத்து மூடிய பெண்கள்
- லாரி மோதி விபத்து; மகள் கண் முன் தந்தை பலி!
- மே தினத்தை கொண்டாடும் குடிமகன்கள்: ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மதுவிற்பனை!
ரூ.10 ஆயிரம் நன்கொடை தராத டாஸ்மாக் ஊழியருக்கு கத்திக்குத்தி: திருவாரூரில் பரபரப்பு
திருவாரூரில் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை தராத டாஸ்மாக் ஊழியரை மர்ம கும்பல் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருவாரூர் அருகே கோவில் விழாவுக்கு நன்கொடை தர வேண்டும் என்று கூறி டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளரிடம் ஒரு கும்பல் சண்டை போட்டு உள்ளது. நன்கொடை தர முடியாது என்று கூறிய டாஸ்மாக் மேற்பார்வையாளரை அந்த கும்பல் கத்தியால் குத்தியதாக தெரிகிறது
இதனை அடுத்து இரத்த வெள்ளத்தில் மிதந்த டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் 6 பேரை தேடி வருவதாக கூறப்படுகிறது
ரூபாய் பத்தாயிரம் நன்கொடை கேட்டதற்கு தர மறுத்ததால் டாஸ்மாக் மேற்பார்வையாளர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
