1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (12:32 IST)

ஏப்ரல் 4ஆம் தேதி டாஸ்மாக் - பார் மூடப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

tasmac
ஏப்ரல் 4ஆம் தேதி டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். 
 
ஏப்ரல் 4ஆம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளார். 
 
அன்றைய தினம் விதிகளை முறையை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் நிலையில் இந்த ஆண்டும் அதே போல் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva