தொடர்புடைய செய்திகள்
- சோழபுரம் பேரூராட்சி செயல்அலுவலரை இடமாற்றம் செய்யகோரி சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்
- கபாடிப் போட்டியில் தன்னை விட பெரியவரை மடக்கிய சிறுவன்! வைரல் வீடியோ 15:39
- 5 நாட்களுக்கு மிதமான மழை – எங்கெங்கு தெரியுமா?
- ரயில்களில் தூங்க விடாம தொந்தரவு..! ரயில்வே நிர்வாகம் போட்ட புதிய உத்தரவு!
- அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை: தமிழகத்திற்கு வானிலை எச்சரிக்கை
இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து வந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழை குறைந்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
