தொடர்புடைய செய்திகள்
- கூடுதலாக 900 மெட்ரிக் டக் ஆக்ஸிஜன்… தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு உத்தரவு!
- தமிழகத்தின் டாக்ஸி ஆம்புலன்ஸ் திட்டம்! – மத்திய அரசு பாராட்டு!
- ஃபேமிலிமேனை தடை செய்யலைனா விளைவு மோசமாக இருக்கும்! – சீமான் எச்சரிக்கை!
- சென்னையில் கொரோனா; 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதி!
- தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பா? – நாளை முதல்வர் ஆலோசனை!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை! – தமிழகத்தில் கனமழை வாய்ப்பு!
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில் தமிழத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 23ம் தேதி அந்தமான் அருகே தெற்கு கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 5 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
