1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu middle schools reopen process

தமிழகத்தில் 1 முதல் 8 வகுப்புகள் திறப்பு? – விரைவில் அறிக்கை சமர்பிக்க திட்டம்!

Tamilnadu
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கை சமர்பிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதலாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக பள்ளிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மீதமுள்ள 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழகத்தில் 1முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து 15ம் தேதி முதல்வரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்” என கூறியுள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வு அச்சம்: சேலம் மாணவர் தற்கொலை!