தொடர்புடைய செய்திகள்
- தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் அவசியமில்லை! – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
- மாணவர் மரணத்திற்கு திமுகதான் பொறுப்பு! – பாஜக அண்ணாமலை கண்டனம்!
- மாணவனை மரணக்குழியில் தள்ளிவிட்டீர்கள்! – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
- தடுப்பூசி போட்டால் தங்க மோதிரம், பித்தளை குடம்! – திருவண்ணாமலையில் வித்தியாச முயற்சி!
- எந்த அடக்குமுறையையும் எதிர்த்து கேள்வி கேட்டவர்! – பாரதியார் குறித்து மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெறுவதால் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் வங்க கடலில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலு பெறுவதால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
