தொடர்புடைய செய்திகள்
- மாணவர் மரணத்திற்கு திமுகதான் பொறுப்பு! – பாஜக அண்ணாமலை கண்டனம்!
- மாணவனை மரணக்குழியில் தள்ளிவிட்டீர்கள்! – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
- தடுப்பூசி போட்டால் தங்க மோதிரம், பித்தளை குடம்! – திருவண்ணாமலையில் வித்தியாச முயற்சி!
- எந்த அடக்குமுறையையும் எதிர்த்து கேள்வி கேட்டவர்! – பாரதியார் குறித்து மு.க.ஸ்டாலின்!
- மாநகராட்சியாக தரம் உயர்ந்த தாம்பரம்! – அரசாணை வெளியீடு!
தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் அவசியமில்லை! – மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!
சாலை ஓரங்களில் வசிப்பர்வர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆதார அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது 7 மணியளவில் தடுப்பூசி முகாம் தொடங்கியுள்ள நிலையில் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த வருகை தந்து வருகின்றனர்.
இந்நிலையில் சாலை ஓரங்களில் வசிப்போர், ஆதரவற்றோர் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆதார் இல்லாததை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆதார் இல்லாவிட்டாலும் தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
