1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (15:50 IST)

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? – வாக்கு எண்ணிக்கை Live Updates

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் கள நிலவரம் உடனுக்குடன் Live Update….




 




திமுக - 153 , அதிமுக - 80, அமமுக - 0, மநீம - 1, நாதக - 0 இடங்களில் முன்னிலை

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 16வது சுற்றில் அதிமுக வேட்பாளர் முருகுமாறனை விட 5170 வாக்குகள் அதிகம் பெற்று விசிக வேட்பாளர் சிந்தனை செல்வன் முன்னிலை

போடி தொகுதியில் 9வது சுற்றில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் 3720 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

பவானிசாகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

அண்ணா நகர் தொகுதி 12 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் மோகன் 9,379 வாக்குகள் முன்னிலை

கொளத்தூர் தொகுதி 11 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 23,176 வாக்குகள் முன்னிலை

விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் 37,893 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து!

திருக்கோவிலூர் தொகுதி 16வது சுற்றில் பாஜக வேட்பாளரைவிட திமுக வேட்பாளர் பொன்முடி 38,933 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது சிபிஎம்; கீழ்வேளூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறைவு - சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி

விராலிமலையில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தம்: மின்னணு இயந்திரத்தில் இருந்த எண்கள் முகவர்களிடம் உள்ள எண்களுடன் மாறுபட்டு இருந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

விராலிமலை: முதல் சுற்றில் சுமார் ஒருமணிநேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 2-ஆவது சுற்றில் ஒன்றரை மணிநேரமாக பாதிப்பு

சென்னை துறைமுகம் தொகுதியில் 6வது சுற்று முடிவில் 3385 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சேகர் பாபு தொடர்ந்து முன்னிலை - பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம் பின்னடைவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், வந்தவாசி ஆகிய இடங்களில் திமுகவும். போளூர், ஆரணி, செய்யார் ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகளில் செஞ்சி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவில்லூரில் திமுகவும். மயிலத்தில் பாமகாவும், திண்டிவனம்(தனி) மற்றும் வானூர் (தனி), ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

கள்ளக்கிறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 4 தொகுதிகளில் உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் திமுகவும். கள்ளக்குறிச்சியில் (தனி) அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 தொகுதிகளில் சங்ககிரி மற்றும் சேலம் (வடக்கு)-ல் திமுகவும். சேலம் (மேற்கு)-ல் பாமகாவும், கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (எஸ்டி), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சேலம் (தெற்கு), வீரபாண்டி ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகளில் சேந்தமங்கலம், நாமக்கலில் திமுகவும். திருச்செங்கோட்டில் கொமதேகவும், இராசிபுரம்(தனி), பரமத்தி-வேலுர், குமாரபாளையம் ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 தொகுதிகளில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸும், ஈரோடு மேற்கு மற்றும் அந்தியூரில் திமுகவும். மொடக்கிறிச்சி, பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயகுமார் 3-வது சுற்றில் பின்னடைவு. திமுக வேட்பாளர் ஜட்ரீம் ரா.மூர்த்தி முன்னிலை!

பாஜக மதியம் 12.30 மணி நிலவரப்படி சென்னை துறைமுகம், தாராபுரம் மற்றும் உதகை ஆகிய 3 இடங்களில் முன்னனியில் உள்ளனர்!

ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி 18,218 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

சென்னையில் உள்ள 16 தொகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக முன்னிலை


சென்னை துறைமுகம் தொகுதியில் 5வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சேகர் பாபு 1903 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை - பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்திற்கு தொடர்ந்து பின்னடைவு

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் 7 வது சுற்று முடிவில் 19,177 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி 40950 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் 2-வது சுற்றில் முன்னிலை

திருவள்ளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா முன்னிலை!

கொளத்தூர் தொகுதியில் 3 சுற்றுகளின் முடிவில் 5968 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை

ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவெரா முன்னிலை

மதுரை தெற்கில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் முன்னிலை

தூத்துக்குடி தொகுதியில் 3-வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் 4,887 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், திமுக 128 (திமுக 106, காங்கிரஸ் 8, மதிமுக 4, சிபிஎம் 3, சிபிஐ 2, விசிக 4, மற்றவை 1) இடங்களையும், அதிமுக 93 இடங்களையும் (அதிமுக 79, பாஜக 3, பாமக 11), மநீம 1 இடங்களையும் பெற்றுள்ளது.

குறிஞ்சிப்பாடி தொகுதியில் பின்னடைவில் இருந்த திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் முன்னிலை பெற்றார்

கோவை தெற்கு தொகுதியில் 3 வது சுற்று முடிவில் ம.நீ.ம வேட்பாளர் கமல்ஹாசன் முன்னிலை பெற்றார்

திருச்செந்தூர் தொகுதியில் 4வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளரை விட 5477 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலை

சென்னை ஆயிரம்விளக்கில் பாஜக கட்சி வேட்பாளர் குஷ்பு சுந்தர் பின்னடைவு

விருத்தாசலத்தில் தேமுதிக பிராமலதா விஜயகாந்த் பின்னடைவு

மூன்றாவது சுற்று முடிவில் முதல்வர் பழனிசாமி முன்னிலை!

கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு ம.நீ.ம. தலைவரும் வேட்பாளருமான கமல்ஹாசன் வருகை!

ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் மூர்த்தி முன்னிலை - அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பின்னடைவு

மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முன்னிலை

தூத்துக்குடி தொகுதியில் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தொடர்ந்து முன்னிலை

விராலிமலை தொகுதியில் மின்னணு வாக்கு இயந்திரத்தில்எண்கள் மாறியுள்ளதாக முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் உடன் தொடர்ந்து வாக்குவாதம்

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ முன்னிலை - பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு பின்னடைவு

சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் முன்னிலை - அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு பின்னடைவு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை - பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பின்னடைவு

நாகை விசிக வேட்பாளர் ஷாநவாஸ் முன்னிலை!

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை

தென்காசி ஆலங்குளம் தொகுதியில் ஹரி நாடார் 1268 வாக்குகள் பெற்றுள்ளார்!

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பின்னடைவு - திமுக வேட்பாளர் வரதராஜன் முன்னிலை

அறந்தாங்கியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசந்திரன் முன்னிலை

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா முன்னிலை

திருவண்ணாமலை தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு முன்னிலை

நெல்லை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் லட்சுமணன் முன்னிலை

கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் முன்னிலை

கோவை தெற்கு தொகுதியில் மநீம கமல்ஹாசன் முன்னிலை

திருப்பூர் வடக்கு அதிமுக வேட்பாளர் கே.என்.விஜயகுமார், சிவகங்கை அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை

அதிமுக வேட்பாளர்கள் வைத்தியலிங்கம், கப்பச்சி வினோத் முன்னிலை

காட்பாடி தொகுதியில் திமுக பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை

காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி முன்னிலை

எடப்பாடியில் முதல் சுற்று முடிவில் முதலமைச்சர் பழனிச்சாமி 5,484 வாக்குகள் பெற்று முன்னிலை. திமுக வேட்பாளர் 2,159 வாக்குகள் பெற்று பின்னடைவு.

உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் கதிரவன் பின்னடைவு

தபால் வாக்கு எண்ணிக்கையில் வாசுதேவநல்லூர் தொகுதியில் மதிமுக வேட்பாளர் முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கையில் கோவை சிங்காநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் முன்னிலை

தபால் வாக்கு எண்ணிக்கையில் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தங்கமணி முன்னிலை

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலை

மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூ முன்னிலை!


தபால் வாக்கு எண்ணிக்கையில் தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல். முருகன் முன்னிலை.

தபால் வாக்கு எண்ணிக்கையில் எடப்பாடி தொகுதியில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை

திமுக - 18 , அதிமுக - 14, அமமுக -1 இடங்களில் முன்னிலை

தொகுதிகளில் அதிமுக 11 இடங்களிலும் திமுக 16 இடங்களிலும் முன்னிலை

தூத்துக்குடி தொகுதியில் தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் முன்னிலை

வேளச்சேரி தொகுதியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

75 மையங்களில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

 ராணி மேரி கல்லூரி மையத்தில் வாக்கு எண்ணிக்கை தாமதம்.

மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் தபால் வாக்குகளை எண்ணும் பணி இன்னும் தொடங்கவில்லை.