தொடர்புடைய செய்திகள்
- பாஜகவின் நீட் கேஸை தள்ளுபடி பண்ணனும்! – மாணவி நீதிமன்றத்தில் மனு!
- மாஸ்டர் செஃப் புதிய ப்ரோமோவை வெளியிட்ட விஜய் சேதுபதி!
- சிகிச்சைக்கு அழைக்க சென்றவர்களை அரிவாளுடன் ரவுண்டு கட்டிய கிராமம்! – நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
- ஆன்லைன் வகுப்பால் உளைச்சல்; தலைமுடியை சாப்பிட்டதால் உருவான கட்டி! – விழுப்புரத்தில் விபரீதம்!
- வடக்கு திசையில் தலை வைத்துப் படுக்கக்கூடாது ...எதனால் தெரியுமா?
தமிழகத்தில் தற்போது உள்ள தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு??
36000 கோவேக்சின் தடுப்பூசிகளோடு தற்போது தமிழ்நாட்டில் 7,36,000 தடுப்பூசி கையிருப்பில் உள்ளன.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலில் உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வருவதில் காலதாமதம் ஏற்படுவதால் அடிக்கடி தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் முகாம் அமைத்து போடப்பட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை எழுந்து தடுப்பூசிகள் போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை மத்திய அரசு ஒதுக்கீட்டில் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது. இதனையடுத்து சென்னையில் இன்று வழக்கம் போல் கொரோனா தடுப்பூசி மையங்கள் இயங்கும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் முறை மட்டும் தற்காலிகமாக நிறுத்தம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 36000 கோவேக்சின் தடுப்பூசிகளோடு தற்போது தமிழ்நாட்டில் 7,36,000 தடுப்பூசி கையிருப்பில் உள்ளன. இதில் சென்னைக்கு மட்டும் 48,000 தடுப்பூசி ஒதுக்கப்பட்டது. சென்னையில் உள்ள 45 தடுப்பூசி மையங்களில் ஒரு மையத்திற்கு 400 தடுப்பூசிகளும் 18 சுகாதார மையங்களுக்கு 200 தடுப்பூசிகளும் அனுப்பபட்டுள்ளன.
