தொடர்புடைய செய்திகள்
- சர்ச்சைக்குரிய இருமல் மருந்து விற்கப்படுகிறதா? அரசு விளக்கம்!
- குடை எடுத்துக்கோங்க.. 26 மாவட்டங்களில் கனமழை! – வானிலை ஆய்வு மையம்!
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- பள்ளி மாணவிக்கு தாலி, 4 மாதத்தில் குழந்தை, சமுதாயத்தை சீரழிக்கும் சினிமா: கிருஷ்ணசாமி
- அடுத்த 4 நாட்களுக்கு மழை: இன்று 14 மாவட்டங்களில்…!
இன்னும் 5 நாட்களுக்கு கனமழை… இன்று 16 மாவட்டங்களில்..!!
இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரிக்கடலை பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதோடு சென்னையை பொறுத்தவரை, அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
