தொடர்புடைய செய்திகள்
- 3வது பெரிய கட்சி நாங்கதான்.. பாஜக இல்ல..! – கே.எஸ்.அழகிரி வாதம்!
- ”இனிமே எதுக்கு வாழணும்.!!?” - அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி!
- மெரினாவில் அலங்கார ஊர்திகள்; ஒரு வாரம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு!
- அலங்கார ஊர்தியை பார்க்க கால அவகாசம் நீட்டிப்பு! – முதல்வர் அறிவிப்பு!
- 188 புதிய அவசரகால ஊர்தி சேவை துவக்கம்!
நாளை எங்கெங்கு மழை? வானிலை அப்டேட்!
நாளை தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் மழை சீசன் முடிந்துவிட்ட போதும் வளிமண்டல சுழற்சி காரணமாக அவ்வபோது மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. சமீபத்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாளை தென் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
