தொடர்புடைய செய்திகள்
- திமுக எம்எல்ஏக்களிடம் பேரம்... கவிழும் அரசு? உளவுத்துறை தகவல்!
- கழிவுநீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பியர்… எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு!
- பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- நீண்ட இடைவெளைக்கு பின் 2000ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு!
- தமிழகத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியவில்லை: யஷ்வந்த் சின்ஹா
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தகவல்.
தமிழகத்தில் இன்று மழை குறித்த விபரங்களை தினந்தோறும் அறிவித்து வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேபோல நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
