தொடர்புடைய செய்திகள்
- 40 தொகுதிகளும் நமதே.. திமுக நிர்வாகிகள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
- பொது இடத்தில் விவாதிக்க தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் சவால்!
- பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி செய்துள்ளது தமிழக உள்துறை- பாஜக குற்றச்சாட்டு
- தமிழக சாலைகளை செம்மைப்படுத்த ரூ.2200 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு
- தமிழகக் கோயில்களில் படிப்படியாக விஐபி தரிசன முறை ரத்து- அமைச்சர் சேகர் பாபு
முதல்வர் முக ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சுவாமி எழுதிய திடீர் கடிதம்: என்ன கூறியுள்ளார்?
தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து ஆலயங்களை விடுவிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழகத்தில் நீண்ட காலமாக இந்து ஆலயங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25, 26 ஆகியவற்றுக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்
மேலும் ஆலயத்தின் எந்த ஒரு மத செயல்பாடுகளின் உரிமைகளையும் அரசு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தமிழக அரசு மதிக்க வேண்டும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து ஆலயங்களை விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
அவ்வாறு செய்ய தவறினால் தமிழக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
