1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Students should bring parents letter to school

அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள்… கண்டிப்பாக இதைக் கொண்டுவரவேண்டுமாம்!

பள்ளி
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சந்தெகம் கேட்க பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 1 முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் விருப்ப அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில் அக்டோபர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்போது அப்படி வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் வாங்கி வரவேண்டும் எனக் கூறியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
குற்றவழக்கில் தலைமறைவு… 26 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி கண்டுபிடிப்பு!