தொடர்புடைய செய்திகள்
- தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!
- சென்னை - திருவள்ளூர் ரயில் பயணம் இனி 10 நிமிடங்கள் அதிகமாகும்: என்ன காரணம்?
- இந்தியாவில் முதல்முறையாக 3 விமான நிலையங்களை இணைக்கும் ரயில்.. 2027ல் முடிக்க திட்டம்..!
- மீண்டும் ஒரு ரயில் விபத்து.. 5 பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தால் அதிர்ச்சி..!
- 39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்?
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செல்லும் தண்டவாளத்தில் பெரிய கல் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த ரயிலை தடுப்பதற்காக சதி செய்த மர்ம நபர்கள் யார் என்பதைக் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் கிளம்பிய பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பு சந்தை மற்றும் சங்கரன்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, ஒரு பெரிய கல், எடையைப் பொறுத்தவரை 10 கிலோவுக்கும் மேல் இருக்கும், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தது.
ரயில் டிரைவர் சாமர்த்தியமாக அதை கண்டுபிடித்து ரயிலை நிறுத்தியதால் ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர், அந்த கல்லை அகற்றிய பின், ரயில் சில நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகள் உடனடியாக தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை தடுப்பதற்குச் சதி செய்த மர்ம நபர்கள் யார் என்பதற்கான தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன், அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான விதத்தில் யாரேனும் சென்றார்களா அல்லது ஏதேனும் வாகனங்கள் வந்ததா? என்பதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Edited by Mahendran
