தொடர்புடைய செய்திகள்
- சட்டப்பேரவையில் நீட் பிரச்சினையால் சர்ச்சை! – காங்கிரஸ் வெளியேற்றம்!
- தும்பை விட்டுட்டு வாலை பிடிச்சா? கடுப்பான விஜயபாஸ்கர்!
- இன்று நாடாளுமன்றம் வந்த 17 எம்பிக்களுக்கு கொரோனா: பெரும் பரபரப்பு
- மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்: மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!
- நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம்: டி.ஆர். பாலு, கனிமொழி பங்கேற்பு
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை சட்டசபைக்கு வரலாமா? சபாநாயகர் தகவல்
இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரின்போது நீட் தேர்வு குறித்து காரசாரமான விவாதம் நடந்தது. அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையேயும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இடையேயும், காரசாரமான வாக்குவாதம் நடந்தது
இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏ ஒருவர் இது குறித்து பேசிய போது காங்கிரஸ் கட்சியின் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவி நளினி சிதம்பரம் தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடினார் என்ற கருத்து தெரிவித்தார்
இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து சபாநாயகர் அருகே வந்து கூட்டமாக கோஷமிட்டனர். இதனை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாளை சட்டசபைக்கு வரலாம் என சபாநாயகர் தகவல் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
