தொடர்புடைய செய்திகள்
- அமுக்கரா கிழங்கில் உள்ள அற்புத சத்துக்களும் அதன் பயன்களும் !!
- அண்ணன் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும்... ஒலித்தது முதல் குரல்!
- என்ன பித்தலாட்டம்டா இது? வாட்ச்சுக்கு பதிலாக கருங்கல்! – இசையமைப்பாளர் அதிர்ச்சி!
- விஜய் தேவரகொண்டா பெயரைச் சொல்லி ஏமாற்ற முயன்ற கும்பல்: சுதாரித்த நடிகை ஆண்ட்ரியா!
- 1-12ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் கணிசமாக குறைப்பு: கல்வித்துறை அறிவிப்பு
சட்டப்பேரவையில் நீட் பிரச்சினையால் சர்ச்சை! – காங்கிரஸ் வெளியேற்றம்!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு குறித்த விவாதத்தில் வாக்குவாதம் எழுந்ததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மத்திய அரசின் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து நடந்த விவாதத்தில் நீட் தேர்வு குறித்து அதிமுக மேல் பழிபோடுவதாக பேசப்பட்ட நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதுதான் நீட் கொண்டுவரப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் நீட்டுக்கு ஆதரவாக ப.சிதம்பரத்தின் மனைவி நீதிமன்றத்தில் வாதாடியதாக அதிமுக குற்றம் சாட்டியது.
அதிமுக உறுப்பினர் தனது பேச்சை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட கூச்சல் குழப்பங்களை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து மேலும் சூடான விவாதங்கள் பேரவையில் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்
