1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (15:33 IST)

ஜாமின் கிடைத்தும் தொடர்ந்து சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா: என்ன காரணம்?

Sivasankar Baba
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் கிடைத்தும் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
 
சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததை அடுத்து அவர் மீது மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 6 வழக்குகள் போஸ்கோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 4  போக்சோ வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது அதேபோல் மேலும் இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து உள்ள நிலையில் தற்போது இரண்டு போக்சோ வழக்குகளில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்து வருகிறது
 
எனவே அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலையிலுள்ளார்.அவரது இரண்டு வழக்குகளில் ஜாமீன் மனு வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து அதன் பிறகு அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது