1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sengottaiyan says about erode election

ஈரோடு கிழக்கில் வெற்றி உறுதி: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Sengottaiyan
ஈரோடு கிழக்கில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகள் தயாராகி வருகின்றன.
 
 திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணி விரைவில் வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மக்கள் மனம் மாறி இருக்கிறார்கள் என்றும் ஈரோடு கிழக்கில் அதிமுகவில் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் அறிவித்த பின் தேர்தல் களம் வியக்கத்தக்க அளவில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஐக்கிய அமீரகத்திடம் பணம் கேட்ட பாகிஸ்தான் பிரதமர்