1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman started to announce election candidates

வேட்பாளர்களை அறிவிக்க துவங்கிய நாம் தமிழர்!!

சீமான்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளையே துவங்கிவிட்டது. 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டின் மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது. முன்னதாக திமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. அதிமுக சமீஅத்தில் தான் தேர்தல் வேட்பாளரையே முடிவு செய்துள்ளது. 
 
ஆனால், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கும் பணிகளையே துவங்கிவிட்டது. நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி என அறிவித்து, 117 சட்டமன்ற தொகுதியில் ஆண் வேட்பாளர்களும், 117 சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளர்களும் நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்படுவார்கள். 
 
ஒருங்கிணைப்பாளர் சீமான் ஓப்புதலுடன், அந்த அந்த மாவட்ட தலைவர்களே சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் கிராமங்கள் தோறும் வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கிவிட்டனர்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மனைவி தூக்கு மாட்டித் தற்கொலை – கணவன் எடுத்த விபரீத முடிவால் அனாதையான 3 குழந்தைகள்!