1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 14 அக்டோபர் 2020 (14:51 IST)

கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தேர்தல் எப்போது? பரபரப்பு தகவல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஆக இருந்த வசந்தகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக முறையாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பாஜக சார்பில் மீண்டும் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என தெரிகிறது
 
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதிக்கு தேர்தல் வரும் பிப்ரவரிக்குள் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் உயிரிழந்ததை அடுத்து காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளதை அடுத்து தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன