தொடர்புடைய செய்திகள்
- சனாதனம் கலாச்சாரம் வேறு, இந்து மதம் வேறு; மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ
- வரும் தேர்தலில் திமுக தோற்பது நிச்சயம்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
- சோனியா காந்தி தலைமையில் காங்., முக்கிய ஆலோசனை
- சனாதனத்தை பற்றி பேசினால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யும் வேலையில் இறங்குவேன்: சுப்பிரமணியன் சுவாமி
- இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை ஆர்.எஸ்.எஸ் தான் இயற்றுகிறதா? கனிமொழி எம்.பி., கேள்வி
காங்கிரஸை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் திமுகவுக்கு ஆதரவு: சீமான்
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றினால் திமுகவுக்கு ஆதரவு தர தயார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்றுங்கள் என்றும் அவ்வாறு வெளியேற்றினால் நான் முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தருகிறேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் இராமேஸ்வரத்தில் தாமரை மற்றும் சூரியன் நேரடியாக போட்டி விட்டால் எனது வேட்பாளரை நான் திரும்ப பெறுவேன் என்றும் அவர் கூறினார்
ஒரே நாடு தேர்தலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்தார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்
பாரத் என்ற பெயரை எடுத்துவிட்டு வேறு பெயரை வைத்து விட்டால் எல்லாம் மாறிவிடுமா என்று கேள்வி எழுப்பிய சீமான், ஒரே நாடு என்றால் ஏன் காவிரி நீர் பெற்று தர முடியவில்லை என்றும் இன்று பயிர் காய்கிறது நாளை வயிறு காயமென்று கூறினார்.
Edited by Mahendran
